O/L, A/L பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி

சாதாரணதர, உயர்தர பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி ; புதிய வழிகாட்டல் கோவை வௌியீடு

by Staff Writer 30-10-2021 | 2:07 PM
Colombo (News 1st) சுகாதார அமைச்சினால் புதிய வழிகாட்டல் கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வழிகாட்டல்கள், எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பிரத்தியேக வகுப்புக்களை 50 வீத மாணவர்களுடன், எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி முதல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.