இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

by Staff Writer 30-10-2021 | 9:57 AM
Colombo (News 1st) நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் சில பகுதிகளில் இன்றும் (30) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வட மத்திய, வட மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடனான மழையின் போது பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, சீரற்ற வானிலையால் முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற் பிராந்தியங்களை மறு அறிவித்தல் வரை பயன்படுத்த வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.