'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை உள்ளடக்குமாறு ஜனாதிபதி பணிப்பு - செந்தில் தொண்டமான் 

by Staff Writer 29-10-2021 | 2:08 PM
Colombo (News 1st) 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி செயலணியை விரிவாக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (28) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறினார்.