முல்லைத்தீவில் இராணுவம் வசமிருந்த 11 ஏக்கர் காணி விடுவிப்பு 

by Staff Writer 28-10-2021 | 9:23 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 11 ஏக்கர் காணி இன்று (28) மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 11 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான ஆவணம், முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.கே.ஏ. பிலப்பிட்டியவினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. 682 ஆவது படைப்பிரிவு தலைமையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.