மழையுடனான வானிலை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம்

மழையுடனான வானிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் 

by Staff Writer 28-10-2021 | 10:04 AM
Colombo (News 1st) நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் பல பிரதேசங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான கடும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.