English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Oct, 2021 | 2:24 pm
Colombo (News 1st) காணொளி மாநாட்டில் வௌியிடப்பட்ட கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த அருட்தந்தை சிறில் காமினி, தமக்கு ஒரு வார கால அவகாசத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி அண்மையில் இடம்பெற்ற காணொளி கலந்துரையாடலின் போது வௌியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக, அருட்தந்தை சிறில் காமினி இன்று (28) அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
எனினும், ஒரு வார கால அவகாசத்தை வழங்குமாறு அருட்தந்தை சாந்த குமார வெலிவிட்டவினூடாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான இணையத்தள விவாதம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் நேற்று (27) அறிக்கை சமர்ப்பித்தது.
இந்தக் கலந்துரையாடலில் தாம் தொடர்பில் பொய்யான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி செய்த முறைப்பாட்டிற்கு ஏற்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
18 May, 2022 | 08:09 AM
22 Apr, 2022 | 04:20 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS