நாட்டில் 60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி

by Staff Writer 27-10-2021 | 11:30 AM
Colombo (News 1st) நாட்டில் 60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இன்று(27) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.