புதிய பணிப்பாளர் நாயகமாக ஷர்மிளா ராஜபக்ஸ

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

by Staff Writer 27-10-2021 | 11:05 AM
Colombo (News 1st) தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஷர்மிளா ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புதிய பணிப்பாளர் நாயகம் நாளைய தினம் (28) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். ஷர்மிளா ராஜபக்ஸ ஜனாதிபதி செயலகத்தின் சமூக ஊடக பிரதானியாகக் கடமையாற்றியுள்ளார். தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த இஷினி விக்ரமசிங்க அண்மையில் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.