'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு

by Staff Writer 27-10-2021 | 9:25 AM
Colombo (News 1st) கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸவினால் வௌியிடப்பட்டுள்ளது. இந்த செயலணியில் 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். 1. கலகொடஅத்தே ஞானசார தேரர் 2. பேராசிரியர் தயானந்த பண்டா 3. பேராசிரியர் ஷாந்திநந்தன விஜேசிங்க 4. பேராசிரியர் சுமேத சிறிவர்தன 5. N.P. சுஜீவ பண்டிதரத்ன 6. சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன 7. சட்டத்தரணி சஞ்சய மாரம்பே 8. எரந்த நவரத்ன 9. பானி வேவல 10. மொஹமட் மௌலவி 11. விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப் 12. கலீல் ரஹ்மான் 13. அசீஸ் நிசார்தீன் ஆகியோர் இந்த செயலணியில் உறுப்பினர்களாவர்.