பொப்பி மலர் தினம்: முதலாவது மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது

by Staff Writer 26-10-2021 | 7:26 PM
Colombo (News 1st) இராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது மலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இன்று அணிவிக்கப்பட்டது. ஜனாதிபதியின் அலுவலகத்தில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணிப்பாளர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உப்புல் பெரேராவினால் ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. வருடாந்தம் நவம்பர் 11 ஆம் திகதி உலகின் பல்வேறு நாடுகள் பொப்பி மலர் தினத்தை நினைவுகூர்வதுடன், இலங்கையில் நவம்பர் 11ஆம் திகதிக்கு அண்மித்த ஞாயிற்றுக்கிழமை இந்த தினமாக நினைவுகூரப்படுகிறது.