Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மருதங்கேணி தெற்கு, தாளையடி பகுதியில் அதிகளவான வெடிபொருட்கள் நேற்று (24) மீட்கப்பட்டுள்ளன.
தனியார் ஒருவர் தனது காணியை துப்புரவு செய்த வேளை இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் குறித்த காணி உரிமையாளரால் உடனடியாக பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொலிசார் நீதிமன்ற அனுமதியை பெற்று அகழ்வுப் பணியில் ஈடுபட்டு பெருமளவு வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் நாளை (26) நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.