by Staff Writer 25-10-2021 | 8:37 PM
Colombo (News 1st) அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வை வரியற்ற வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின்போது நேற்று (24) இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாயப ராஜபக்ஸ தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது.