மேலும் 19 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 19 கொரோனா மரணங்கள்; இதுவரை 13,593 பேர் உயிரிழப்பு

by Staff Writer 24-10-2021 | 11:52 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 19 கொரோனா மரணங்கள் சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 10 பெண்களும் 09 ஆண்களும் அடங்குகின்றனர். இதற்கிணங்க, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,593 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 5,35,529 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 5,03,090 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றுக்குள்ளாகிய 18,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.