பொருத்தமான ஏதேனுமொரு ஆடையுடன் பாடசாலைக்கு வருகை தர மாணவர்களுக்கு அனுமதி

by Staff Writer 24-10-2021 | 6:18 PM
Colombo (News 1st) பொருத்தமான ஏதேனுமொரு ஆடையுடன் நாளை (25) முதல் பாடசாலைக்கு வருகை தருவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைகளை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவு வகுப்புகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படுகின்றன. 200-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள ஆரம்ப பாடசாலைகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.