நாளை முதல் மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவை ஆரம்பம்

நாளை (25) முதல் மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவைகள் ஆரம்பம்

by Staff Writer 24-10-2021 | 11:29 AM
Colombo (News 1st) நாளை (25) முதல் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கிணங்க நாளை முதல் 133 ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். மாதாந்த பருவச்சீட்டு வைத்திருப்போருக்கு மாத்திரமே நாளை முதல் ரயில் போக்குவரத்தில் ஈடுபட முடியும் எனவும் அவர் கூறினார்.