தம்மை பற்றிய தவறான பிரசாரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக P.B. ஜயசுந்தர தெரிவிப்பு

by Staff Writer 24-10-2021 | 3:15 PM
Colombo (News 1st) தம்மை பற்றி முன்னெடுக்கப்படும் தவறான பிரசாரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து உரம் கொண்டு வருவதற்காக வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும் நடைமுறையின் போது ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தர அரச வங்கிக்கு தொடர்ந்தும் அழுத்தம் விடுத்திருந்ததாக பத்திரிகையொன்றில் செய்தி வெளியானது. இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அரச வங்கியொன்றில் வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பது, குறித்த வங்கிக்கும் கணக்கு உரிமையாளருக்கும் இடையிலான செயற்பாடாகும். நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு அமைய செயற்படுவது வங்கியின் பொறுப்பு என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி, தம்மை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரங்களுக்கு எதிராக ஏற்கனவே கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.