இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்கள் இலங்கை வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்கள் இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2021 | 4:01 pm

 Colombo (News 1st) இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

பயிற்சி நடவடிக்கைக்காக இந்த கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்களும் திருகோணமலை துறைமுகத்திற்கு 4 கப்பல்களும் வருகை தந்துள்ளன.

INS Magar, INS Shardul, INS Sujata (P56), INS Tarangini, INS Sudarshini, CGS Vikram ஆகிய கப்பல்களே வருகை தந்துள்ளன.

இந்திய கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுடனான கெடட் படையினர் இந்த கப்பல்களில் வருகை தந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்