யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் தமிழக கடற்படையினரால் கைது

by Bella Dalima 23-10-2021 | 11:30 AM
Colombo (News 1st) இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 02 மீனவர்களே நாகபட்டினம் கடற்படையினரால் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு மீனவர்களும் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் - ஆதிகோவிலடி பகுதியை சேர்ந்த இரண்டு மீனவர்களே தமிழகத்தில் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இரண்டு மீனவர்களையும் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.