16 மற்றும் 17 வயதான பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது

by Staff Writer 22-10-2021 | 11:21 AM
Colombo (News 1st) 16 மற்றும் 17 வயதான பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பாடசாலை அதிபர்களால் வழங்கப்படும் நேரத்தில் மாணவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும். 15 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் எதிர்வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். பிள்ளைகள் கூடிய விரைவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி பெற்றோரிடம் கோரிக்கை விடுத்தார். இதனிடையே, இந்த நாட்களில் தடுப்பூசியை பெற முடியாமற்போனால், சனிக்கிழமைகளில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலங்களில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார ​சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி, அறிவிக்கப்படும் நேரத்தில் தடுப்பூசியைப் பெற செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார்.