விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை

விவேக்கின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பில்லை

by Bella Dalima 22-10-2021 | 3:22 PM
முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்திருந்தார். இந்த மனுவை ஏற்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் முடிவில் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. உயர் இரத்த அழுத்தத்தால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு விளக்கம் அளித்துள்ளது.