கொழும்பு மாவட்டத்திற்குள் மாத்திரம் ரயில் சேவை

ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்திற்குள் மாத்திரம் ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது

by Staff Writer 22-10-2021 | 2:49 PM
Colombo (News 1st) ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. போக்குவரத்து அமைச்சினால் இன்று வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்திற்குள் மாத்திரம் ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். அத்துடன், ரயில் மாதாந்த பருவச்சீட்டினை வைத்திருக்கும் பயணிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.