ஆரம்ப பிரிவு பாடசாலைகள் 25 ஆம் திகதி ஆரம்பம்

அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 25 ஆம் திகதி ஆரம்பம்

by Staff Writer 22-10-2021 | 5:51 PM
Colombo (News 1st) இரண்டாம் கட்டத்தின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை (25) தொடக்கம் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 200-க்கும் அதிக மாணவர்களைக் கொண்ட அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார். இன்று (22) நடைபெற்ற COVID ஒழிப்பு விசேட கூட்டத்தின் போது இதற்கான பரிந்துரை கிடைத்ததாகவும் அவர் கூறினார். கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளும் தயார் செய்யப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார். முதலாம் கட்டத்தின் கீழ் 200 மாணவர்களுக்கும் குறைவானவர்கள் கற்கும் பாடசாலைகளின் கற்பித்தல் செயற்பாடுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.