English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
22 Oct, 2021 | 4:26 pm
Colombo (News 1st) சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் அங்கு மீண்டும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றினை தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் பீஜிங் உட்பட சுமார் ஐந்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தொற்று பரவலை தடுக்க 40 இலட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவ்வாறு வேறு மாகாணங்களுக்கு செல்ல விரும்புவோர் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை உடன் வைத்திருத்தல் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலாத்தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலக்கரி இறக்குமதிக்காக மொங்கோலியாவில் இருந்து வருகை தந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று மாத்திரம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
04 May, 2022 | 07:00 AM
26 Apr, 2022 | 12:13 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS