WhatsApp உரையாடல்கள் இரகசியமாக செவிமடுக்கப்பட்டதாக பாட்டலி சம்பிக்க தெரிவிப்பு

WhatsApp உரையாடல்கள் இரகசியமாக செவிமடுக்கப்பட்டதாக பாட்டலி சம்பிக்க தெரிவிப்பு

WhatsApp உரையாடல்கள் இரகசியமாக செவிமடுக்கப்பட்டதாக பாட்டலி சம்பிக்க தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2021 | 2:08 pm

Colombo (News 1st) நீதிமன்ற அனுமதியின்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தமது WhatsApp உரையாடல்களை செவிமடுத்துள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்றத்தில் சிறப்புரிமை வினாவை முன்வைத்த வேளையில் வௌிப்படுத்தியுள்ளார்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தமது தொலைபேசி அழைப்புகள் செவிமடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், நீதிமன்ற அனுமதியின்றியே தொலைபேசி அழைப்புகள் செவிமடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், இந்த செயற்பாடானது தமது பாராளுமன்ற வரப்பிரசாதங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்