30 க்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

by Staff Writer 21-10-2021 | 10:48 AM
Colombo (News 1st) 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 20 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்ட 57 வீதமானோர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸையேனும் (Dose) பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல தெரிவித்தார். இதனிடையே, நாடளாவிய ரீதியில் 18 - 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.