by Staff Writer 21-10-2021 | 3:03 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த 08 தமிழ் கைதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த மனுதாரர்களை அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து பொருத்தமான வேறு சிறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் குழாம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இதனிடையே, குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.