பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் 

அமைச்சர் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் 

by Staff Writer 21-10-2021 | 9:32 AM
Colombo (News 1st) மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீர் வாகன பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.