பாரத பிரதமருக்கு பகவத் கீதையை பரிசளித்த நாமல் ராஜபக்ஸ

by Staff Writer 20-10-2021 | 8:14 PM
Colombo (News 1st) இந்தியாவுக்கு சென்றுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, இந்தியப் பிரதமர் நரோந்திர மோதியை சந்தித்தார். புத்த தர்மம் இந்தியாவிலிருந்து கிடைத்த விசேட பரிசு என நாமல் ராஜபக்ஸ தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அடங்கிய பகவத் கீதையின் முதற்பிரதியை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இந்தத் தருணத்தில் இந்தியப் பிரதமரிடம் கையளித்துள்ளார். குருஷேத்திரப் போரில் அர்ஜூனனுக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை, மனித வாழ்வின் வழிகாட்டியாகத் திகழ்கின்றது.