ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

by Staff Writer 20-10-2021 | 9:42 PM
Colombo (News 1st) வெல்லவாய, எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 38 வயதான தந்தை, 15 வயதான மகன் மற்றும் 11 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.