by Staff Writer 19-10-2021 | 10:06 AM
Colombo (News 1st) மேலும் 608,000 பைசர் (Pfizer) தடுப்பூசிகள் இன்று (19) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
கட்டார் தலைநகர் டோஹாவிலிருந்து இவை கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனிடையே, நாட்டில் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் நேற்று 39,862 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு கோடியே 47 இலட்சத்து 85 ஆயிரத்து 189 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸேனும் (DOse) ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒரு கோடியே 28 இலட்சத்து 18 ஆயிரத்து 379 பேர் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் (Dose) பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப்பிரிவு மேலும் கூறியுள்ளது.