ஜனாதிபதி - எகிப்து தூதுவர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி - எகிப்து தூதுவர் இடையே சந்திப்பு

by Staff Writer 18-10-2021 | 5:14 PM
Colombo (News 1st) இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹூசைன் அல் சஹார்ட்டி (Hussain Al Saharty), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எகிப்தின் சிவில் அமைப்புகளின் இணைப்பாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள ஹூசைன் அல் சஹார்ட்டி, தனது சேவைக் காலத்தை நிறைவுசெய்துகொண்டு நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இலங்கையுடனான தொடர்பினை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக இதன்போது ஹூசைன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு தொடர்புகள் மற்றும் சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான தேவை குறித்தும் ஹூசைன் அல் சஹார்ட்டி, ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.

ஏனைய செய்திகள்