கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை 

கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை 

by Staff Writer 18-10-2021 | 10:22 PM
Colombo (News 1st) புத்தளம் - வெட்டாளி பகுதியில் பெண் குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. ஒரு வயது 10 மாதம் நிரம்பிய குழந்தையொன்றே கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (18) பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.