by Staff Writer 18-10-2021 | 9:49 AM
Colombo (News 1st) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 05 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
அத்துடன் பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.
கேரளாவின் கோட்டயம் (Kottayam) மாவட்டத்தில் பல வீடுகள் வௌ்ள நீருடன் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.