களனியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

களனி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

by Staff Writer 17-10-2021 | 11:31 AM
Colombo (News 1st) களனி - பத்தலஹேனவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலே தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். கோனவல பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் களனி பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.