கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் குணமடைவு

by Staff Writer 16-10-2021 | 4:12 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,92,305 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரை 5,30,421 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 24 ,667 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,449 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.