ஒக்டோபர் 21 ஆம் திகதி வட மாகாண பாடசாலைகள் திறப்பு

ஒக்டோபர் 21 ஆம் திகதி வட மாகாண பாடசாலைகள் திறப்பு

by Bella Dalima 16-10-2021 | 2:37 PM
Colombo (News 1st)  எதிர்வரும் 21 ஆம் திகதி வட மாகாணத்திலுள்ள 639 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 200 மாணவர்களுக்கம் குறைந்த ஆரம்ப பாடசாலைகளை திறக்கும் தேசிய ரீதியான நடவடிக்கைக்கு அமைய, இந்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக வட மாகண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். பாடசாலைகளை மீள திறப்பதற்கான நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ஆரம்பக்கல்வி பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வட மாகண கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.