IPL இறுதிப்போட்டி: சென்னையும் கொல்கத்தாவும் மோதல்

IPL இறுதிப்போட்டி: சென்னை சுப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்

by Staff Writer 15-10-2021 | 11:10 AM
Colombo (News 1st) IPL கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (15) நடைபெறவுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இந்த போட்டியில் மோதவுள்ளன. முன்னாள் சாம்பியன்களான இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ள இந்த போட்டி துபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில், இரவு 7.30-க்கு ஆரம்பமாகவுள்ளது. இவ்வாண்டு தொடரில் இரண்டு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளிலுமே சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது. IPL போட்டிகளில் இரண்டு அணிகளும் மோதிய 25 போட்டிகளில், சென்னை அணி 16 போட்டிகளிலும் கொல்கத்தா 9 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன. சென்னை அணி 8 தடவைகள் இறுதிப்போட்டியில் விளையாடி 3 தடவைகள் சாம்பியனாகியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது. 2012 ஆம் ஆண்டு IPL இறுதிப்போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.