by Staff Writer 15-10-2021 | 5:22 PM
Colombo (News 1st) மொனராகலை - தம்பகல்ல கஹட்ட, கஹபிட்டிய குளத்தில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நீரில் மூழ்கிய இருவரும் காப்பாற்றப்பட்டு, மடுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொல்லாதெனியவை சேர்ந்த 14 வயது சிறுவர்கள் இருவரே தாமரைக் கிழங்கு பிடுங்கச் சென்ற போது அனர்த்தத்தை எதிர்கொண்டனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.