கொழும்பின் பல பகுதிகளில் நாளை (16) நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (16) இரவு 8 மணி முதல் 13 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 15-10-2021 | 5:30 PM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் நாளை (16) இரவு 8 மணி முதல் 13 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கொழும்பு 9, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் நாளை (16) இரவு 8 மணி முதல் நாளை மறுதினம் (17) காலை 9 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.