ஏப்ரல் 21 தாக்குதல்:62பேரின் விளக்கமறியல் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: காத்தான்குடியில் கைதான 62 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

by Bella Dalima 15-10-2021 | 10:32 AM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மட்டக்களப்பு - காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 62 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் A.C.ரிஸ்வான் முன்னிலையில் வழக்கு காணொளி தொழில்நுட்பத்தினூடாக நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்கள் 62 பேரினதும் விளக்கமறியலை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். நுவரெலியாவில் தேசிய தௌஹீத் ஜாமா-அத் அமைப்பினூடாக ஆயுதப்பயிற்சி பெற்றமை தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.