மேலும் 21 கொரோனா மரணங்கள்

மேலும் 21 கொரோனா மரணங்கள்; இதுவரை 13,429 பேர் உயிரிழப்பு

by Staff Writer 15-10-2021 | 10:36 AM
Colombo (News 1st) நாட்டில் நேற்று 674 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை 5,29,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4,91,604 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, மேலும் 21 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி இந்த மரணங்கள் அனைத்தும் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 15 ஆண்களும் 06 பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்த 21 பேரில் 16 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,429 ஆக அதிகரித்துள்ளது.