by Staff Writer 15-10-2021 | 1:29 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்கான 401 ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 02 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்