மேலும் 31 கொரோனா மரணங்கள்; 680 பேருக்கு தொற்று

மேலும் 31 கொரோனா மரணங்கள் பதிவு; 680 பேருக்கு தொற்று

by Bella Dalima 14-10-2021 | 10:40 AM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்கள் 680 ​பேர் நேற்று (14) அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை 5,28,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4,91,238 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, மேலும் 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி இந்த மரணங்கள் அனைத்தும் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 20 ஆண்களும் 11 பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்த 31 பேரில் 23 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,408 ஆக அதிகரித்துள்ளது.