கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு 15 ஆம் திகதி முதல் COVID தடுப்பூசி வழங்கப்படவுள்ளது

by Bella Dalima 13-10-2021 | 4:12 PM
Colombo (News 1st) கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு நாளை மறுதினம் (15) முதல் COVID தடுப்பூசி வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. உயர்தர மாணவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். ஏனைய மாவட்ட மாணவர்ளுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையங்கள் பிரதேச சுகாதார மத்திய நிலையங்களூடாக அறிவிக்கப்படவுள்ளது.