by Staff Writer 13-10-2021 | 10:58 AM
Colombo (News 1st) மேலும் 23 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த அனைத்து மரணங்களும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி பதிவாகியவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும் 12 பெண்களும் அடங்குகின்றனர்.
உயிரிழந்த 23 பேரில் 19 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,377 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் 671 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
அதற்கமைய, நாட்டில் இதுவரை 5,27,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.