போதை மாத்திரைகளை விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்

ஏழாலையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 13-10-2021 | 11:24 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். 9060 போதை மாத்திரைகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையை சேர்ந்த 38 வயது நபரே யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் A.A. ஆனந்தராசா உத்தரவிட்டுள்ளார்.