பெரும்போகத்திற்கான உர விநியோகம் ஆரம்பம்

பெரும்போகத்திற்கான உர விநியோகம் ஆரம்பம்

by Bella Dalima 12-10-2021 | 1:20 PM
Colombo (News 1st) பெரும்போகத்திற்கான உரத்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட திரவ சேதன பசளை​யே தற்போது விநியோகிக்கப்படுவதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன கூறினார். உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து இந்த பசளை கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனை தவிர விவசாயிகள் தமக்குத் தேவையான சேதன பசளையை தாமே உற்பத்தி செய்து கொண்டுள்ளதாகவும் கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இதனிடையே, KCL சேதன பசளையும் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.