தனியார் துறை ஊழியர்களின் ஓய்விற்கான வயதெல்லை அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி

by Bella Dalima 12-10-2021 | 12:59 PM
Colombo (News 1st) தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.