மக்கள் அதிருப்தி அடைந்துள்ளமையை ஏற்றுக்கொள்கிறேன் - ஜனாதிபதி

by Staff Writer 10-10-2021 | 7:24 PM
Colombo (News 1st) தாமும் தமது அரசாங்கமும் எதிர்பார்த்ததை போன்று செயற்படவில்லை என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (10) தெரிவித்தார். புதிய உத்வேகத்துடன் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்வதை உறுதிப்படுத்துவதாக  ஜனாதிபதி இதன்போது கூறினார். இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அனுராதபுரம் - சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். இதன்போது ஜனாதிபதிக்காக மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது.

ஏனைய செய்திகள்