ராகலை தீ விபத்து; பிரேத பரிசோதனை இன்று (09)

ராகலை தீ விபத்து; சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று

by Staff Writer 09-10-2021 | 1:24 PM
Colombo (News 1st) ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீயில் கருகி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (09) இடம்பெறுகின்றன. நேற்று முன்தினம் (07) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயது மற்றும் 11 வயதான சிறுவர்கள், அவர்களின் 34 வயதான தாய், 60 மற்றும் 55 வயதான தாயின் பெற்றோர் என ஐவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தடயவியல் பரிசோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.